Tuesday, November 23, 2010

பிடுங்கி எறியப்பட்டவர்கள்....

நாங்கள் பிடுங்கி எறியப்பட்டவர்கள்
மீண்டும் மீண்டும்
பிடுங்கி எறியப்படுபவர்கள்.....


கால்வாய் கரையோர வயல்கள்
பிளாட்டுகளாய் கீறப்பட்டபோது.....


குளங்களில் தண்ணீருக்கு பதில் மண் நிரப்பி
அரசு அலுவலகங்களை,
ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை நட்ட போது......


சாலைகளை அகலப்படுத்த நடைமேடைகள்
இடிக்கப்பட்ட போது.....


மலை நடுவே புறம்போக்கு நிலத்துக்கு
முதலாளி பட்டா பெற்ற போது.....


நாங்கள் பிடுங்கப்பட்டவர்கள்.....


எங்கே நாங்கள் எங்களை நட்டுக்கொள்ள...
தேடிக்கொண்டிருக்கிறோம்.....


என்னப்பன் என்னை
மரமாக படைக்க முடிந்திருந்தால்......


என்னன்னை என்னை
மரமாக நட்டிருந்தால்.....


நானும் கடைசிவரை பிடுங்கப்படாமல் இருந்திருப்பேனோ?

No comments:

Post a Comment