எழுத்தாளர்
நக்கீரன் எழுதிய காடோடி நாவலை இன்று
படித்து முடித்தேன்.
2014ம் வருடம்
வெளிவந்த நாவலை இவ்வளவு தாமதமாகப் படித்ததற்காக என்னை நானே கேள்வி கேட்கிறேன்.
நாவல் குறித்து
நான் எந்த விமர்சனமும் வைக்கப்போவதில்லை. ஏனெனில் வாசிப்பு ஒரு பேரனுபவம். அதனை
ஒருவர் மற்றவருக்கு கடத்துவது என்பது சாத்தியமில்லை என்று நான் கருதுகிறேன்.
ஆனால் நாவலைப்பற்றி
என் முகநூல் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவா. அவர்களும் விடுபட்டு
போகாமல் தாமதமாகவேனும் படிக்க வேண்டும் என்ற அவாவில் சிறு அறிமுகம்.
போர்னியோ(தற்போதைய மலேசியா) பகுதியில் காட்டு மரம் வெட்டும் நிறுவனத்தில் வேலை செய்பவர் தான் கதைச்
சொல்லி. ஒரு சுற்றுலா பயணி போல காட்டை, காட்டு விலங்குகளை காண ஆரவம் கொண்ட அவர்
சந்திக்கும் காடோடி(நமது மொழில் காட்டு மனிதர், பழங்குடியின
மனிதர், மலைவாழ் மக்கள் எனப் பல...) மூலம் அவர்
இயற்கையை காடோடிகளை புரிந்து கொள்ளுதல். தன் நிறுவனத்தால் வெட்டப்பட்ட
மரங்களுக்காக அழும் மனிதனாக வெளியேறுகிறார் கதைச் சொல்லி.
நாவலை
குறித்துச் சொல்ல நாவலிலிருந்து சில வரிகள்.....
“தொகுதி முழுக்க மரங்களின் அழிவு. நிழல்களின் இறப்பாய் மாறியிருக்கிறது.”
“பணம் ஈட்டும் ஒரு கருவியாய் காட்டைப்
பார்க்கத் தெரியாத ஓர் ஆன்மாவின் தூயச் சொற்கள் பலிக்கும்.”
“நீங்கள் திரும்பிச் செல்லும்போது இக்காடு
பெரிய பிணமாகக் கிடக்கும். அவ்வளவு பெரிய
பிணத்துக்கும் ஒரு பிணப்பெட்டி செய்து கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்”
“எந்தவொரு குறிப்பிட்ட இடத்தின் மீதோ
மனிதரின் மீதோ பற்றுக் கொள்ளக் கூடாது என்பதே அது. அது மனிதனை இறுக்கட்டிப்
போட்டுவிடும் என்று நம்பினேன்.”
நூலை வாங்கி
படிக்க விரும்புவோருக்கு,
udumalai.com
– 73 73 73 77 42
விலை – 260/-

No comments:
Post a Comment