Wednesday, January 13, 2010
ஊனமில்லா ஊனம்
அவன் அவன்தான்
ரொம்ப சாதாரணமாகவே இருக்கிறான்.
யாரும் அவனை தனித்து
அடையாளம் காண முடிவதில்லை.
அவனுடைய ஊனத்தையும் தான்.
இயற்கையின் படைப்பில்
அவனிடத்தில் தோற்றக்குறைகள் இல்லை.
ஆனால் குறையோ மிகப்பெரிது
எந்த கூப்பாடும்.....
அமர்களமும்....
கும்மாளமும்....
இரைச்சலும்.....
ஒப்பாரியும்.....
.............
அவன் செவிகளுக்கு எட்டுவதில்லை.
எல்லாவற்றிற்கும் என்.. உன்...
முகத்தை மட்டும் பார்க்கிறான்.
ஆனால் உணர்வுகள் அதிகம்
உன்... என்... ஒவ்வொரு உணர்ச்சியையும்
அவன் புரிந்து கொள்கிறான்.
அவனது உணர்ச்சியை வெளிக்காட்டுகிறான்.
அது சில நேரத்தில்
மகிழ்ச்சியாய் பூக்கிறது...
பல நேரத்தில்
எரிமலையாய் வெடிக்கிறது...
அவனை புரியவில்லை என்ற ஆதங்கத்தில்.
கண்ணே நாங்கள் அனைவரும்
மற்றவர்களை விட அதிகமாகவே
உன்னை புரிகிறோம்.
ஆனால் அதனை நீ புரிந்து கொள்ள
ஏன் தாமதம்.
Subscribe to:
Post Comments (Atom)
அடர்த்தி மிகுந்து நுட்பமான கவிதை. வலிகள், மகிழ்தலில் கிடைத்த பக்குவம் பளிச்சிடுகிறது. இறுதிப் பாராவையும், மூன்றாம் நபரை குறிப்பிட்டு எழுதியது போல் எழுதியிருக்கலாம். ஜே. லாசர்
ReplyDelete