Thursday, February 4, 2010

தீவு

அடர்ந்த கூட்டத்தின் நடுவே அமைந்த தீவில்
தன்னந்தனியனாக திரிகிறேன் நான்.
உறவுகள் ஒதுக்குகையில் பதறாத உணர்வுகள்
நீ ஒதுக்குகையில் கொந்தளிக்கிறது....

முரண்டோடும் மனக்குதிரையை
கட்ட முனைந்து தோற்றபோது
போர்களச் சுவடுகள்
விலா எலும்புகளை கிழித்துக் கொண்டு வலிக்கிறது.

நினைத்ததை சாதிப்பதில்
உனது உறுதியை மிரண்டு போய் பார்க்கிறேன்.
செந்துணி கண்ட காளையாய்
ஓடத்துடிக்கும் மனதுக்கு
பல நேரங்களில் மௌனம் கடிவாளமாகிறது.

தோற்று போவதின் இன்பத்தை
ஒன்றுக்கு பலதாய் உணர்ந்த பின்பும்
மீண்டும் மீண்டும் தோற்காமலிருக்க
முனைப்போடு முனையுது மனசு.

மழையோ... பனியோ... புயலோ....
இல்லாத நாளில்
நடுங்கி ஒடுங்குது உடம்பு.

எனக்காகவோ... உனக்காகவோ... யாருக்காகவோ...
தொடரத்தான் செய்கிறது காத்திருப்பு.

No comments:

Post a Comment