Friday, April 15, 2011

மனுஷ்ய நாடகம்

"வில்லியம் ஸரோயன்" எழுதிய மனுஷ்ய நாடகம் என்ற ஆங்கில நாவலின் தமிழாக்கம் படிக்கக் கிடைத்தது.
தமிழில் இதனை க. நா. சுப்ரமண்யம் மொழி பெயர்த்துள்ளார்.
ஒரு போர்.......
ஒரு குடும்பத்தின் ஒரு அங்கம் மார்க்கஸ் போர் முனையில்......
போர் வீரனை எதிர்பார்த்து இதாகா என்ற ஊரில்......
தாய் கேட்டி மெக்காலே, தங்கை பெஸ், தம்பி உலிஸிஸ்....
இவர்களை எல்லாம் காக்கும் பொறுப்பில் 14 வயதே ஆன ஹோமர் மெக்காலே....
ஹோமர் படித்துக்கொண்டே தந்தி ஆபீஸில் மாலையில் வேலை....
போர் முனை சாவு செய்திகளை சுமந்து வரும் தந்திகளை விநியோகிக்கிறார்.....
ஒரு நாள் தந்தியடிக்கும் க்ரோகன் என்ற கிழவர் டைப் செய்த தந்தியில் மார்க்கஸின் சாவு செய்தி....
அது தான் அவர் பெற்ற கடைசி தந்தி....
தந்தியை முழுவதும் எழுதி முடிக்காமலே இறக்கிறார்.....
குடும்பத்துக்கு எப்படி சொல்வது என தவிக்கும் ஹோமர்....
போர் முனையிலிருந்து காயத்தோடு மெக்காலே வீட்டுக்கு வந்து சேரும் ஆதரவற்ற போர் வீரன் டோபி ஜார்ஜ்....
நண்பனின் பிரிவால் வாடும் குடும்பத்தோடு இணைந்து விடுதல்....

-என ஒரு போரின் விளைவு ஒரு சிறு குடும்பத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை அழகாக படம் பிடிக்கிறது இந்த நாவல். வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.

No comments:

Post a Comment