உனக்கும் எனக்கும் சண்டையில்லை
உன்னப்பனுக்கும் என்னப்பனுக்கும் பகையில்லை
எங்காத்தாளும் உன்னாத்தாளும்தான்
ஒன்றாக வெற்றிலை வாங்கி
பங்கிட்டுக் கொண்டார்கள்
உன் வீட்டு பிள்ளைகளுக்கு
என் வீட்டு பிள்ளைகளும்
என் வீட்டு பிள்ளைகளுக்கு
உன் வீட்டு பிள்ளைகளும்தான்
விளையாட்டு தோழர்கள்
இதெல்லாம் ஒரு சமய மாநாட்டில்
எப்படி முறிந்து போனது…
No comments:
Post a Comment