Monday, September 19, 2011

நகை

தனது பாம்படத்தையும்
தண்டையையும் மாற்றி
நவீனப் படுத்தப்பட்ட போது
முதலில் மறுத்த பாட்டி
புதிய நகையை
மகிழ்ந் தேற்றாள்…

கழுத்தில் முறுக்கு செயினும்
கையில் தங்க வளையல்களும்
காதில் தொங்கட்டானும்
இருந்தபோதும்
இப்படி மூழியாகவா
கல்யாண வீட்டுக்கு போகவென்ற
அம்மாவின் முணுமுணுப்பு ஒரு
தொடர்கதைத் தான்…

மனதொப்பா திருமணத்தில்
நகைகளை மட்டும் மகிழ்வோடு
ஏற்றுக் கொண்டாள்
தனது தங்கை…

தனது பதினொன்று பவுன்
முறுக்கு செயினை திருடன்
பறித்துப்போன பின்
அளவை மட்டும் குறைத்துக் கொண்டாள்
எனது மனைவி…

பொட்டுக் கம்மலை
விளையாடும் போது தொலைத்த
எனது மகள்
வேப்பங்குச்சியை சொருகுகிறாள்
காது துவாரம் அடையாமலிருக்க.

No comments:

Post a Comment