Thursday, July 3, 2014

21-03-2011

இன்று முற்பகல் திருமதி ஷெரினிடம் பள்ளிக்கூட இணைய தளத்தை வெளியிடுவது குறித்து பேசினேன்.
ஒரு தீர்மானம் எடுக்கும் நிலைக்கு வர முடியவில்லை. இணையத்தை வெளியிட எதிர்கால திட்டங்களை முடிவு செய்வது தேவை எனக் கூறுவது எதற்கு எனத் தெரியவில்லை. வாதங்கள் பொருளற்றதாக இருப்பதாகத் தோன்றியது.
ஒரு கட்டத்தில் அப்படியானால் வெளியிட்டுக் கொள்ளுங்கள் என கோபமான பதில் வந்தபோது அப்படி தன்னிச்சையாக முடிவு எடுக்கமாட்டேன் என ஆணித்தரமாகக் கூறி விட்டேன்.
பெங்களூரில் இருக்கும் ஒரு பெண்மணி இது போன்ற இணைய தள கருத்தெழுதுதலில் சிறப்பானவர் எனத் திடீரெனக் கூறியபோது சிரிப்பாக வந்தது. எந்த அடிப்படையில் இந்த முடிவுக்கு வருகிறார்கள் என்பது தான் சிரிப்பை வரவழைக்கிறது.
அந்த பெண்மணி தன்னைப் பற்றி கூறியவற்றை வைத்தே முடிவெடுப்பதாக எனக்குத் தோன்றியது.
பின்னர் எப்.எம் சிஸ்டம் குறித்து ஆலோசனைச் செய்ய யாரையோக் கூப்பிடுகிறார்கள். அவரிடம் 30-ம் தேதி பேச முடியுமா எனக் கேட்கிறார்கள். எல்லாமே இணையத்தை வெளியிடுவதை தாமதப்படுத்த மட்டுமே செய்கிறது. வேறு என்னச் சொல்ல இருக்கிறது.
கிறிஸ்டோபர் சாரிடம் இது குறித்து பேசிவிட்டேன். எல்லோரையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டியிருக்கிறது. இல்லையெனில் சுற்றி நின்று கைச்சூண்டி கேலி பேசும் கூட்டத்தின் நடுவே நிறுத்தப்பட்டவன் போலாவேன் எனத்தான் நினைக்கத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment