Thursday, July 3, 2014

மறையாத செஞ்சூரியன்

வங்கத்தில் ஒரு செஞ்சூரியன் மறைந்தான் - அவன்
எண்ணத்தில் மக்கள் மனமஞ்சத்தில் என்றும் மறையான்
சட்டம் பயின்று சட்டாம்பிள்ளையாக நினைத்தவன்
சிவப்பை படித்து மக்கள்படைக்கு தளபதியானான்
இயற்கை மறைக்கும் மனிதர்களில் பலரை
அதனில் நீயும் ஒன்றென எண்ணும்
அற்பர் புரிவர் நாளைய நாளில்
இது போல் இல்லை இல்லை என
புரிந்தவர் போற்றுவர் என்றும்.

No comments:

Post a Comment