Thursday, July 3, 2014

சமூக மதிப்பு

மதிப்பு எப்படி வருகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. ஒரு நபருடைய மதிப்பு அவருடைய செயல் மூலம் வடிவம் பெறுகிறது என்பது தான் சரியாக இருக்கும். அவ்வாறு ஒருவரது செயலால் வடிவம் பெறும் மதிப்பு அவருடைய தொடர் நடவடிக்கைகள் மூலம் மேலும் பரிமாணங்களை பெறுகிறது.
தனி மனித மதிப்புகள் எப்போதும் அவருடைய சுய நடவடிக்கைகளால் நிர்ணயிக்கப்படுகிறது என்பது உண்மைதான்.
ஆனால் இளம் பருவத்தில் செயல்களை விட அவரது சூழல் முக்கியத்துவம் பெறுகிறது. அவரது குடும்பத்தார், பரம்பரை போன்றவற்றின் அடிப்படையில் சமூகம் அவரிடமிருந்து சில குணாதிசயங்களை எதிர்பார்க்கும். அந்த எதிர்பார்ப்பு ஒத்துப்போக வேண்டும் என்ற சில நிர்பந்தங்களையும் அவருக்கு உருவாக்கும்.
அவ்வாறு நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு நல்லவர்களாக இருப்பதற்கு தங்களது மூதாதையர்கள் மூலமாக ஒரு உந்துதல் கூடுதலாக கிடைக்கிறது.
இதே நிலை இழிகுலத்தில் பிறந்தவர்க்கு கிடைப்பது இல்லை. இளம் வயதில் அவர் செய்யும் இழிச்செயல்கள் கூட அவரது பிறப்பால் அப்படித்தான் செய்வான் என்று ஏற்றுக் கொள்ளும் நிலைக்குச் சென்று விடுகிறது.
எனவே உயர்குடிபிறப்பு என்பது சமூகத்தின் ஒவ்வொருவர் மீதும் பல தாக்கங்களை ஏற்படுத்தத்தான் செய்யும், செய்கிறது.

No comments:

Post a Comment