கவிதைகள் வளரும் நாளில்
நீயும் நானும்…
இணைந்தும் பிரிந்தும்
இணைந்திருந்தோம்.
இப்போதும் உனை காணும்போது
நினைவுகளின் ஓரங்களில்
மீண்டு மறைகிறது
மறக்கடிக்கப் பட்டவை
நீயோ… நானோ…
யாரேனும் ஒருவர்
வாய் திறந்திருக்கலாம் தான்…
இப்போதும் அதே நேசத்தோடு
நெஞ்சங்கள் பதைக்கின்றன
இருவருக்கும்…
இணைந்திருந்தால் மட்டுமல்ல
நினைத்திருந்தாலும்
காதலில் வெற்றி தான்.
No comments:
Post a Comment