என்றோ எங்கோ சந்தித்தோம்…
பகிர்ந்தோம்…
மகிழ்ந்தோம்…
ஏனென்று கேட்காமல்.
பின்னர்தான் பயிற்றுவிக்கப்பட்டோம்
ஏன்? எதற்கு? எனக் கேட்க...
நட்புகளை மறக்க...
கால ஓட்டத்தில் கரைய...
எல்லாமே மறந்து
கரைந்து கொண்டிருக்கும்
வாழ்க்கையில்
மீண்டும் ஒரு நாள்
தேடலாம்…
பிடுங்கியவர்களையல்ல
நட்பின் வேர்களை…
No comments:
Post a Comment