தினமணி தமிழ்மணியின் கலாரசிகன் பகுதியில் 21-08-2011 அன்று வெளியான குறிப்பு.
அடேயப்பா என்று வியப்பில் சமைந்துவிட்டேன். இன்னும் அந்த வியப்பிலிருந்து மீளவில்லை.
தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியைச் சந்திக்கவும், அவருடன் பேசிப் பழகவும், கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், தமிழிலக்கியம் பற்றிய அவரது கருத்துகள் பலவற்றை உள்வாங்கிக் கொள்ளவும் எனக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது கோவையில் கடந்த ஆண்டு நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. நான் வாழும் காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய தமிழறிஞர் ஒருவருடன் பேசிப் பழகக் கிடைத்த அந்த வாய்ப்பைப் பிறவிப் பேறாகவே கருதுகிறேன்.
சமீபத்தில் காலமான அந்த இலங்கைத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியை ஒரு தமிழறிஞர் என்ற வகையில் மட்டுமே அறிந்திருந்த எனக்கு, அவர் திரைப்படங்களைப் பற்றிய ஆழமான புரிந்துணர்வு உடையவர் என்பது ஓர் இன்ப அதிர்ச்சி. சினிமாவைப் பற்றிய ஆழங்கால்பட்ட தெளிவு அந்தத் தமிழறிஞருக்கு இருந்திருந்தது என்பது மட்டுமல்ல, சினிமாவின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றிய தனது கருத்துகளை அவர் பதிவும் செய்திருக்கிறார்.
"தமிழ்ப் பண்பாட்டில் சினிமா' என்னும் தலைப்பில் பேராசிரியர் முனைவர் கார்த்திகேசு சிவத்தம்பி எழுதியிருக்கும் இந்த நூல், சினிமா என்னும் புலக்காட்சி ஊடகத்தின் வருகையினால் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட அசைவியக்கம், தமிழ்ச் சமூகம் சினிமா என்னும் புலக்காட்சிக் கலை ஊடகத்தை உள்வாங்கிக் கொண்ட விதம், தமிழ்ச் சமூகத்தில் சினிமா ஓர் அரசியல் ஊடகமாகச் செயலாற்றிய விதம், தமிழ்ச் சினிமா உலகில் நடிப்பு முறைகளின் வளர்ச்சி, திரைக்கவிதையின் வளர்ச்சி ஆகியவற்றை ஆய்வுக்குட்படுத்துகின்றது.
""பிரபல நாவல்களைத் திரைப்படமாக எடுக்கும்பொழுது மூலநூலில் காணப்பட்ட சொல்லாடல்களையே பயன்படுத்த வேண்டும் என்ற மரபு தமிழில் போற்றப்படவில்லை என்றே கூறவேண்டும். இதனால் அகிலன், ஜானகிராமன் போன்றோரது நாவல்கள் திரைப்படமாக்கப்பட்டபொழுதும் நாவலில் வந்த உரையாடல்கள் இடம்பெறவில்லை'' என்பதை முனைவர் சிவத்தம்பி வருத்தத்துடன் குறிப்பிடுகிறார். தமிழ்ப் படங்கள் படமாக்கப்படுகின்றபொழுது சினாரியோ பகுப்பு, அது படமாக்கப்படும் முறைமை, அவற்றில் சொல்லாடலின் ஆழம் பற்றிய நுணுக்கமான பார்வை மிகக் குறைவான இயக்குநர்களிடம்தான் காணப்படுகிறது என்பதும் முனைவர் சிவத்தம்பியின் கருத்து.
தனது புத்தகத்தில் முனைவர் சிவத்தம்பி குறிப்பிட்டிருக்கும் இன்னொரு மிக முக்கியமான பதிவு சிந்திக்கத்தக்கது. சினிமா மாயை தமிழ்ச் சமுதாயத்தைப் பிடித்து ஆட்டுவது உண்மை. தமிழர்களின் சினிமா மாயையால் திரைப்பட உலகம் பயனடைந்திருக்கிறது. பலர் கோடீஸ்வரர்களாகி இருக்கிறார்கள். ஆனால் சினிமாவால் தமிழ் பயனடைந்திருக்கிறதா, தமிழ்ச் சமுதாயம் பயனடைந்திருக்கிறதா என்கிற கேள்வியும் எழுகிறதே...
""தமிழ்நாட்டில் பண்பாட்டுக் கருவூலங்களைத் திரைப்பட வடிவில் கொண்டுவந்து உலகுக்குக் காட்டக்கூடிய எந்தவொரு சினிமாவும், குறிப்பாகச் சித்திரிப்பு சினிமா (ச்ங்ஹற்ன்ழ்ங் ச்ண்ப்ம்) இன்று எம்மிடத்தே இல்லை என்றே கூறவேண்டும்.
ராஜராஜசோழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகளை வனப்புணர்வுடன் காட்டுவதாகக் கொள்ளமுடியாது. இச்சந்தர்ப்பத்தில், தமிழ்நாட்டின் பாரம்பரியச் சிற்பம், பரதம், நாட்டார் கலைகள் பற்றிய மிகச் சிறந்த உலகப் புகழ்பெற்ற ஆவணப் படங்கள் இல்லை எனலாம். பால சரஸ்வதியின் ஆடற்சிறப்பை சத்தியஜித்ரே காட்டியது போன்று நமது பரதக் கலைஞர்களையோ, இசைக் கலைஞர்களையோ, ஸ்தபதிகளையோ செம்மையான சித்திரிப்பு மூலம் காட்டும் ஆவணப்படங்கள் இதுவரை தமிழ்ச் சூழலில் தயாரிக்கப்பட்டுள்ளனவா எனும் வினா உண்டு.
தமிழ்ப் பண்பாட்டில் அனைத்திந்திய, உலக நிலைப்பட்ட முக்கியத்துவத்தினைக் காட்டும் ஒரு திரைப்படம்கூட இதுவரை இல்லை என்றே கூறவேண்டும். தில்லானா மோகனாம்பாள் படம் இத்தகைய தேவையைச் சிறிதும் பூர்த்தி செய்யாது'' - இது முனைவர் சிவத்தம்பியின் கருத்து.
"ஒரு கலைஞனின் மறைவும் கலையின் இழப்பும்' என்ற தலைப்பில் முனைவர் சிவத்தம்பி பதிவு செய்திருக்கும் சிவாஜிகணேசன் பற்றிய "அரங்கியல் குறிப்பு' அற்புதத்திலும் அற்புதம். அதேபோல, "திரைவளர்த்த கவிதை' என்ற தலைப்பில் திரைப்படப் பாடல்கள் பற்றிய அவரது ஆய்வும் பல புதிய கருத்துகளை முன்வைக்கிறது.
"தமிழ்ப் பண்பாட்டில் சினிமா' என்பதற்குப் பதிலாக, "தமிழறிஞரின் பார்வையில் சினிமா' என்று தலைப்பு வைத்திருக்கலாமோ?
அடேயப்பா என்று வியப்பில் சமைந்துவிட்டேன். இன்னும் அந்த வியப்பிலிருந்து மீளவில்லை.
தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியைச் சந்திக்கவும், அவருடன் பேசிப் பழகவும், கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், தமிழிலக்கியம் பற்றிய அவரது கருத்துகள் பலவற்றை உள்வாங்கிக் கொள்ளவும் எனக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது கோவையில் கடந்த ஆண்டு நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. நான் வாழும் காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய தமிழறிஞர் ஒருவருடன் பேசிப் பழகக் கிடைத்த அந்த வாய்ப்பைப் பிறவிப் பேறாகவே கருதுகிறேன்.
சமீபத்தில் காலமான அந்த இலங்கைத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியை ஒரு தமிழறிஞர் என்ற வகையில் மட்டுமே அறிந்திருந்த எனக்கு, அவர் திரைப்படங்களைப் பற்றிய ஆழமான புரிந்துணர்வு உடையவர் என்பது ஓர் இன்ப அதிர்ச்சி. சினிமாவைப் பற்றிய ஆழங்கால்பட்ட தெளிவு அந்தத் தமிழறிஞருக்கு இருந்திருந்தது என்பது மட்டுமல்ல, சினிமாவின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றிய தனது கருத்துகளை அவர் பதிவும் செய்திருக்கிறார்.
"தமிழ்ப் பண்பாட்டில் சினிமா' என்னும் தலைப்பில் பேராசிரியர் முனைவர் கார்த்திகேசு சிவத்தம்பி எழுதியிருக்கும் இந்த நூல், சினிமா என்னும் புலக்காட்சி ஊடகத்தின் வருகையினால் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட அசைவியக்கம், தமிழ்ச் சமூகம் சினிமா என்னும் புலக்காட்சிக் கலை ஊடகத்தை உள்வாங்கிக் கொண்ட விதம், தமிழ்ச் சமூகத்தில் சினிமா ஓர் அரசியல் ஊடகமாகச் செயலாற்றிய விதம், தமிழ்ச் சினிமா உலகில் நடிப்பு முறைகளின் வளர்ச்சி, திரைக்கவிதையின் வளர்ச்சி ஆகியவற்றை ஆய்வுக்குட்படுத்துகின்றது.
""பிரபல நாவல்களைத் திரைப்படமாக எடுக்கும்பொழுது மூலநூலில் காணப்பட்ட சொல்லாடல்களையே பயன்படுத்த வேண்டும் என்ற மரபு தமிழில் போற்றப்படவில்லை என்றே கூறவேண்டும். இதனால் அகிலன், ஜானகிராமன் போன்றோரது நாவல்கள் திரைப்படமாக்கப்பட்டபொழுதும் நாவலில் வந்த உரையாடல்கள் இடம்பெறவில்லை'' என்பதை முனைவர் சிவத்தம்பி வருத்தத்துடன் குறிப்பிடுகிறார். தமிழ்ப் படங்கள் படமாக்கப்படுகின்றபொழுது சினாரியோ பகுப்பு, அது படமாக்கப்படும் முறைமை, அவற்றில் சொல்லாடலின் ஆழம் பற்றிய நுணுக்கமான பார்வை மிகக் குறைவான இயக்குநர்களிடம்தான் காணப்படுகிறது என்பதும் முனைவர் சிவத்தம்பியின் கருத்து.
தனது புத்தகத்தில் முனைவர் சிவத்தம்பி குறிப்பிட்டிருக்கும் இன்னொரு மிக முக்கியமான பதிவு சிந்திக்கத்தக்கது. சினிமா மாயை தமிழ்ச் சமுதாயத்தைப் பிடித்து ஆட்டுவது உண்மை. தமிழர்களின் சினிமா மாயையால் திரைப்பட உலகம் பயனடைந்திருக்கிறது. பலர் கோடீஸ்வரர்களாகி இருக்கிறார்கள். ஆனால் சினிமாவால் தமிழ் பயனடைந்திருக்கிறதா, தமிழ்ச் சமுதாயம் பயனடைந்திருக்கிறதா என்கிற கேள்வியும் எழுகிறதே...
""தமிழ்நாட்டில் பண்பாட்டுக் கருவூலங்களைத் திரைப்பட வடிவில் கொண்டுவந்து உலகுக்குக் காட்டக்கூடிய எந்தவொரு சினிமாவும், குறிப்பாகச் சித்திரிப்பு சினிமா (ச்ங்ஹற்ன்ழ்ங் ச்ண்ப்ம்) இன்று எம்மிடத்தே இல்லை என்றே கூறவேண்டும்.
ராஜராஜசோழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகளை வனப்புணர்வுடன் காட்டுவதாகக் கொள்ளமுடியாது. இச்சந்தர்ப்பத்தில், தமிழ்நாட்டின் பாரம்பரியச் சிற்பம், பரதம், நாட்டார் கலைகள் பற்றிய மிகச் சிறந்த உலகப் புகழ்பெற்ற ஆவணப் படங்கள் இல்லை எனலாம். பால சரஸ்வதியின் ஆடற்சிறப்பை சத்தியஜித்ரே காட்டியது போன்று நமது பரதக் கலைஞர்களையோ, இசைக் கலைஞர்களையோ, ஸ்தபதிகளையோ செம்மையான சித்திரிப்பு மூலம் காட்டும் ஆவணப்படங்கள் இதுவரை தமிழ்ச் சூழலில் தயாரிக்கப்பட்டுள்ளனவா எனும் வினா உண்டு.
தமிழ்ப் பண்பாட்டில் அனைத்திந்திய, உலக நிலைப்பட்ட முக்கியத்துவத்தினைக் காட்டும் ஒரு திரைப்படம்கூட இதுவரை இல்லை என்றே கூறவேண்டும். தில்லானா மோகனாம்பாள் படம் இத்தகைய தேவையைச் சிறிதும் பூர்த்தி செய்யாது'' - இது முனைவர் சிவத்தம்பியின் கருத்து.
"ஒரு கலைஞனின் மறைவும் கலையின் இழப்பும்' என்ற தலைப்பில் முனைவர் சிவத்தம்பி பதிவு செய்திருக்கும் சிவாஜிகணேசன் பற்றிய "அரங்கியல் குறிப்பு' அற்புதத்திலும் அற்புதம். அதேபோல, "திரைவளர்த்த கவிதை' என்ற தலைப்பில் திரைப்படப் பாடல்கள் பற்றிய அவரது ஆய்வும் பல புதிய கருத்துகளை முன்வைக்கிறது.
"தமிழ்ப் பண்பாட்டில் சினிமா' என்பதற்குப் பதிலாக, "தமிழறிஞரின் பார்வையில் சினிமா' என்று தலைப்பு வைத்திருக்கலாமோ?
No comments:
Post a Comment