Monday, August 15, 2011

இணையத்தில் வாசித்த கவிதை


சாப்பிட்டேன் என
அம்மாவிடமும்
கவலைப்பட வில்லை என
அப்பாவிடமும்
அடுத்த மாதத்திற்குள்
வேலை வாங்கிவிடுவேன் என
அண்ணனிடமும்
முதல் மாதச் சம்பளத்தில்
உனக்கொரு மடிக்கணினி என
தங்கையிடமும் சொல்ல முடிந்தது…
காலையிலிருந்து சாப்பிடல
ரொம்ப பசிக்குதுடா,
ஏதாவது வாங்கிக்கொடு
என நண்பனிடம்
மட்டும் தான் கேட்க முடிந்தது….

No comments:

Post a Comment